Saturday, 11th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
நாமக்கல்: கடந்த சில மாதங்களுக்கு முன் 2022 - 2023 ஆம் ஆண்டு பிளஸ் டூ சி.பி.எஸ்.சி தேர்வு நடைபெற்றது இதில் லட்சக்கணக்கான பேர் எழுதி இருந்தனர். இந்நிலையில் தேர்வில் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.
இதில் நாமக்கல் கிரீன் பார்க் பள்ளியைச் சேர்ந்த மாணவி ஆர்.மீனாட்சி சிபிஎஸ்சி வகுப்பு பாடப் பிரிவில் 500 க்கு 498 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய அளவில் மூன்றாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
மாணவி ஆர்.மீனாட்சி நாமக்கல் குமரன் பாலிடெக்னிக் மருத்துவர்கள் டாக்டர்கள் என்.ராஜ்குமார், கே.கண்ணகி அவர்களது மகள் வீட்டு பேத்தியும், டாக்டர் ஆர்.ராம்குமார் மற்றும் டாக்டர் ஆர்.சாவித்திரி ஆகியோரது மகளும் ஆவார்.
சி.பி.எஸ்.சி தேர்வில் அகில இந்திய அளவில் மூன்றாம் இடம் பிடித்த மாணவி ஆர்.மீனாட்சியை பள்ளி தாளாளர், தலைமையாசிரியர், ஆசிரியர், ஆசிரியைகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.